Monday, January 12, 2009

இடைக்காலச் சோழர்களின் வரலாற்றுச் சுருக்கம்


கி.பி.10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர்கள் தமிழகத்தின் சக்தி வாய்ந்த பேரரசாக உருவெடுத்தனர். முதலில் தஞ்சையையும் பின்னர் கங்கைகொண்ட சோழபுரத்தையும் தலைநகராகக் கொண்ட அவர்கள் இந்திய தீபகற்பத்தின் பறந்து விரிந்த நிலப்பரப்பையும் தாண்டி, கி.பி.1025 வாக்கில் இந்தியாவின் தெற்கு, மேற்கு பகுதிகளில் இருந்த தீவுகளையும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் தம் ஆட்சிப் பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர்."... கி.பி.9 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சோழப்பேரரசு தென்னிந்தியாவின் தன்னிகரில்லா சக்தியாகத் திகழ்ந்தது. அதன் தனிப்பெரும் சக்தியான மாபெரும் கடற்படையைக் கொண்டு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளை தனக்குள் அடக்கியது. குப்தர்கள் காலத்திலிருந்தே சோழ வம்சம் ஒரு தனிப்பெரும் சக்தியாக விளங்கி வந்தது. போர்க்கலையையும் தவிர்த்து சோழர்கள் கடல் வாணிபத்தில் தலை சிறந்து விளங்கி வந்தனர்" என்று இந்தியாவின் முதல் பிரதமர் மறைதிரு. ஜவகர்லால் நேரு அவர்கள் தனது " உலக வரலாற்றின் மின்னல்கள்" (Glimpses of World History) எனும் நூலில் தெளிவாக இடைக்காலச் சோழர்களின் சிறப்பை விளக்கியுள்ளார்.எ.ல். பாஷம் எனும் வட இந்திய வரலாற்று ஆசிரியர் தனது "வாண்டர் தட் வாஸ் இந்தியா" எனும் புத்தகத்தில், வரலாற்றின் இடைக்காலத்தில் சோழர்களின் தவிர்க்க முடியா முக்கியத்துவத்தை பின்வருமாறு விளக்குகிறார்..." இடைக்காலத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வலிமை வாய்ந்த பேரரசாக சோழப் பேரரசு திகழ்ந்து வந்தது. நவீன காலத்திற்கு முன்பாகவே இந்தியப் பெருங்கடலின் அநேக பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த வலிமைமிகு கடல் சக்தியாக சோழர்கள் விளங்கி வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்பான காலத்தை எடுத்து கொண்டால், சோழர்கள் மட்டுமே தெற்காசியாவின் கடல் ராஜ்யத்தை ஆண்டு வந்தனர்"சோழர்களின் பல்துறை வளர்ச்சியைக் கண்டு, ஒரு தமிழகத்தை சாராத வரலாற்றாசிரியரே தனது "Currents of South-East Asian History" மற்றும் "Kings of World Stature" புத்தகங்களில் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் சிறப்பை வியந்து போற்றியுள்ளார்.

இடைக்காலச் சோழர்கள் (கி.பி.848 - கி.பி.1029)

1. விஜயாலய சோழன் : கி.பி.848-881 : பெற்றோர் பெயர் அறியப்படவில்லை
தலைநகரம்: பழையாறை, பிநாளில் தஞ்சை

2.ஆதித்த சோழன் :848-881 கி.பி. : (1) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை

3.பராந்தக சோழன் - 1: 848-881 கி.பி. : (2) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

4.கண்டராதித்த சோழன் : 950-957 கி.பி. : (3) இன் இரண்டாம் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்

5.அரிஞ்சய சோழன் : 956-957 கி.பி. :(3) இன் மூன்றாம் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்

6.பராந்தக சோழன்-2 : (சுந்தர சோழன்) 957-970 கி.பி. (5) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

(7) உத்தம சோழன் : கி.பி. 970-985 - (4) இன் மகன்
தலைநகரம் - தஞ்சாவூர்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

(8) ராஜராஜ சோழன் - 1 : கி.பி. 985-1014 - (6) இன் மகன்
தலைநகரம் - தஞ்சாவூர்
துறைமுகம் - நாகப்பட்டினம்
வட இந்தியாவின் கலிங்கத்தை வெற்றி கொண்டவர்
கடல் கடந்து இலங்கையையும் மாலத்தீவுகளையும் வென்றவர்
சீன நாட்டுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தவர்

(9) ராஜேந்திர சோழன் - 1: கி.பி.1012-1044 - (8) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
வட இந்தியாவின் கங்கை முதல் வங்கதேசம் வரையிலான பகுதிகளை வென்றவர்
கடல் கடந்து இலங்கை, லக்ஷ தீவுகள், மாலத்தீவுகள், அந்தமான் நிக்கோபார், கீழ் பர்மா, கீழ் தாய்லாந்து, மலேசியாவின் பல பகுதிகள், இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் லாவோ தீவுகளையும் (கம்போடியா மன்னரின் நட்பு பொருட்டு) வென்றவர்.
கம்போடியா மற்றும் சீனாவுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தார்.

(10) ராஜாதிராஜ சோழன் - 1: கி.பி.1018-1054 - (9) இன் மூத்த மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்

(11) ராஜேந்திர சோழன் - 2 : கி.பி. 1051-1063 - (9) இன் இரண்டாம் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்

(12) வீரராஜேந்திரசோழன் : கி.பி.1063-1070 - (9) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

கடல் கடந்து இலங்கை, கீழ் பர்மா, மலேசியாவின் கேதா, இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா வின் சில பகுதிகள், மற்றும் காண்டோனுக்கு அருகிலுள்ள தாவொயிஸ்த் சீனா பகுதிகளை தனது மருமகன் முதலாம் குலோத்துங்க சோழனை - (14) கொண்டு வென்றார்.

(13) அதிராஜேந்திர சோழன் : கி.பி. 1067-1070 - (12) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(14) குலோத்துங்கசோழன் - 1 : கி.பி.1070-1120 - (10), (11), & (12) இன் தமக்கை மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்.

(15) விக்கரமசோழன்: கி.பி. 1118-1135 - (14) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(16) குலோத்துங்க சோழன் - 2 : கி.பி. 1133-1150 - (15) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(17) ராஜராஜசோழன்- 2 : கி.பி.1146-1163 - (16) இன் மகன்
தலைநகரம்: கங்கைகொண்டசோழபுரம், பிற்காலத்தில் ராஜராஜபுரம்(பழையாறை)
துறைமுகம் - நாகப்பட்டினம்

(18) ராஜாதிராஜசோழன் - 2 : கி.பி.1163-1178 - (15) இன் பேரன் & (17) இன் ஒன்று விட்ட சகோதரர்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்.

(19) குலோத்துங்கசோழன்- 3 : கி.பி.218 - (17) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(20) ராஜராஜசோழன்- 3 : கி.பி. 256 - (19) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(21) ராஜேந்திரசோழன்- 3 : கி.பி.1246-1279 - (20) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

No comments:

Post a Comment