சோழ தேச சுற்றுப் பயணத் தொடக்கம்....2010
தமிழ்க் குலத்தின் தனிச் சிறப்பை உலகறிய உரைத்துக் கூறியபாரதத்தின்தனிப்பெரும் பேரரசாய் விளங்கிய சோழப் பேரரச சுற்றுப் பயணத்தைஇனிதாகதொடங்கியிருக்கிறோம்... பல்வேறு மாறுதல்களுக்குப் பின்னர், இறுதியாகபத்துநண்பர்களுடன் சீருந்து சீரிய முறையில் சாலையில் சென்றுகொண்டிருக்கும்இந்த மயக்கும் மாலைப் பொழுதினில், நம் மனம் சற்றேறக்குறையதொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது...முடியாட்சிநடைபெற்ற காலத்திலும் மக்களாட்சி முறையின் சிறப்புக்களை அறிந்தஒரேபேரரசனாய்த் திகழ்ந்த உடையார் ஸ்ரீ ராஜராசத் தேவர் தம் வாழ்வின்அர்த்தமாய்க்கருதிய தஞ்சைப் பெரிய கோவிலும், இஞ்சி சூழ் தஞ்சை எனசங்கஇலக்கியங்களால் பாராட்டப்பெற்ற இடைக்காலச் சோழர்களின் தலைநகரமாம்தஞ்சையே இந்த சுற்றுப் பயணத்தின் மையம் என்றாலும், பண்டைத்தமிழ்வரலாறு முழுவத்ம் சிறப்பு பெற்றுத் திகழ்ந்த குடந்தையும்,பிற்காலசோழர்களின் தலைநகரமாய் வேங்கையின் மைந்தன் ராஜேந்திரசோழரால்நிர்மாநிக்கப்பெற்ற கங்கை கொண்ட சோழபுரமும், இரண்டாம்ராஜராஜசோழனால் எடுப்பிக்கப்பட்டதும், சோழர் கால கலையின்உச்சமாகக்கருதப்பட்டதுமான தாராசுரமும், இந்த பண்டைத்தமிழ் நகரங்களைச்சுற்றிஇருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமங்களையும், எம் தமிழ்நாட்டின்மறத்தமிழர் வாழ்வின் மாண்பையும் கண்கூடாகப் பார்க்கப் போவதைபற்றியபெருமிதத்தில் நெஞ்சம் விம்முகிறது... தொடர்ந்து மூன்று நாட்கள்பயணத்தில்நடக்கவிருக்கும் கலகப்புகள், சொதப்பல்கள், மனம் நிறையும்தருணங்கள், கற்றுக் கொள்ளும் பாடங்கள் என அனைத்தையும் தொடர்ந்து பதியத்திட்டமிட்டுஇம்முறை நம் அன்பு இளவல் ஜெயக்குமார் அவர்களின்மடிக்கணினியையும், இணைப்பில்லா வலைத் தொடர்புடன் எடுத்துவந்திருக்கிறோம்... தொடர்ந்துபதிவோம்...
We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDelete