Friday, August 6, 2010

சோழ தேச சுற்றுப் பயணத் தொடக்கம்....2010

தமிழ்க் குலத்தின் தனிச் சிறப்பை உலகறிய உரைத்துக் கூறியபாரதத்தின்தனிப்பெரும் பேரரசாய் விளங்கிய சோழப் பேரரச சுற்றுப் பயணத்தைஇனிதாகதொடங்கியிருக்கிறோம்... பல்வேறு மாறுதல்களுக்குப் பின்னர், இறுதியாகபத்துநண்பர்களுடன் சீருந்து சீரிய முறையில் சாலையில் சென்றுகொண்டிருக்கும்இந்த மயக்கும் மாலைப் பொழுதினில், நம் மனம் சற்றேறக்குறையதொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது...முடியாட்சிநடைபெற்ற காலத்திலும் மக்களாட்சி முறையின் சிறப்புக்களை அறிந்தஒரேபேரரசனாய்த் திகழ்ந்த உடையார் ஸ்ரீ ராஜராசத் தேவர் தம் வாழ்வின்அர்த்தமாய்க்கருதிய தஞ்சைப் பெரிய கோவிலும், இஞ்சி சூழ் தஞ்சை எனசங்கஇலக்கியங்களால் பாராட்டப்பெற்ற இடைக்காலச் சோழர்களின் தலைநகரமாம்தஞ்சையே இந்த சுற்றுப் பயணத்தின் மையம் என்றாலும், பண்டைத்தமிழ்வரலாறு முழுவத்ம் சிறப்பு பெற்றுத் திகழ்ந்த குடந்தையும்,பிற்காலசோழர்களின் தலைநகரமாய் வேங்கையின் மைந்தன் ராஜேந்திரசோழரால்நிர்மாநிக்கப்பெற்ற கங்கை கொண்ட சோழபுரமும், இரண்டாம்ராஜராஜசோழனால் எடுப்பிக்கப்பட்டதும், சோழர் கால கலையின்உச்சமாகக்கருதப்பட்டதுமான தாராசுரமும், இந்த பண்டைத்தமிழ் நகரங்களைச்சுற்றிஇருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமங்களையும், எம் தமிழ்நாட்டின்மறத்தமிழர் வாழ்வின் மாண்பையும் கண்கூடாகப் பார்க்கப் போவதைபற்றியபெருமிதத்தில் நெஞ்சம் விம்முகிறது... தொடர்ந்து மூன்று நாட்கள்பயணத்தில்நடக்கவிருக்கும் கலகப்புகள், சொதப்பல்கள், மனம் நிறையும்தருணங்கள், கற்றுக் கொள்ளும் பாடங்கள் என அனைத்தையும் தொடர்ந்து பதியத்திட்டமிட்டுஇம்முறை நம் அன்பு இளவல் ஜெயக்குமார் அவர்களின்மடிக்கணினியையும், இணைப்பில்லா வலைத் தொடர்புடன் எடுத்துவந்திருக்கிறோம்... தொடர்ந்துபதிவோம்...

சோழ தேச சுற்றுப் பயணம்

சொற் சுவையும் பொருட் சுவையும் ததும்பி வழிகின்ற எவர்க்குமினிய எம் தாய்மொழி தமிழ் வாயிலாக வரலாற்றைக் கேட்கக் கேட்க மனம் எங்கும் மகிழ்ச்சி மத்தாப்பூ போல பூத் தூவும். அதுவும், "ஓங்கு பெருந்செந்நெலூடு கயலுகள், பூங்குவளைப் போதிற் பொறிவண்டு கண்படுப்ப" என்று ஆண்டாள் கண்ட கனவைப் பத்து பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் நனவாக்கித் தந்த சோழ வம்ச வரலாறென்றால் கேட்பார் அடையும் மன மகிழ்வுக்கு அளவே இருக்காது. ஒரு எழுத்தாளனுக்கு பொருட் சுவையைத் திறம்பட கொடுக்கும் திறமை மட்டும் போதாது; அதனுடன் சொற் சுவையும் சேரும் போதுதான் அதன் இனிமையும் முழுமை பெறும்; அனைவரையும் சரியான முறையில் போய்ச் சேரும். அந்த வகையில், இரு சுவையும் திறம்படக் கலந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு நம் முன்னோர்களின் காதல், வீரம், அரசியல் வாழ்வு, அவர் எடுப்பித்த நற்பணிகள் எனப் பல்வேறு அருஞ்செயல்களையும், சங்ககால இலக்கியங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் மூலமிருந்து எடுத்தளிக்கும் பணியை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் ஈடுபட்டு வந்திருந்தாலும், எம் போன்ற கடைக்கோடி தமிழனுக்கும் விளங்கும் வகையில் அதைச் சேர்க்கும் பணியைத் தம் சிரமேற்கொண்டிருந்தவர்கள் வரலாற்று நெடுங்கதை ஆசிரியர்கள்தாம் என்றால் அது மிகையாகாது. அவற்றுள் சிறந்ததுவாகவும், தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கமாகவும் கருதத் தக்கது அமரர்.திரு.கல்கி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படைத்த "பொன்னியின் செல்வன்" எனப்படும் வரலாற்றுப் புதினமாகும். ௧௯௫௦ களில் கல்கி இதழில் தொடர்கதையாய் வெளிவந்த இப்புதினம், சுமார் மூன்று, நான்கு தலைமுறையைச் சேர்ந்த தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவரும் ஒரு உன்னதப் படைப்பாகும். பண்டைத் தமிழரின் மாண்பு, அவர் கொண்டிருந்த உயர்குணம், எம் தமிழ்நாட்டின்பால் இயற்கை அன்னை கொண்டிருந்த காதல், விவசாயத்தை செழித்தோங்கச் செய்த காவிரி நதியின் தீரம் உள்ளிட்ட பல செய்திகளையும் திறம்படவும், சுவைபடவும் எடுத்துரைக்கும் ஓர் களஞ்சியம் அந்த நெடுங்கதை என்றால் அது மிகையாகாது.
அமரர் திரு.சுஜாதா அவர்கள், ஒரு முறை தம் கட்டுரையில், "இணையம் என்பது கங்கை நதி போல; அதில் புனிதம் இருக்கும் அதே நேரம், பிணங்களும் மிதந்து வரும்; எதை எடுத்துக் கொள்வது என்பது ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்தது" என்று குறிப்பிட்டிருப்பார். அதற்கிணங்க, "பொன்னியின் செல்வன்" நெடுங்கதைக்காக ஆர்குட் சமூக இணையதளத்தில் தொடங்கப்பட்ட குழும உறுப்பினர்தாம் நாம். அவ்விணைய தளத்தில் இருக்கும் முற்றிலும் செயல்படாத பல குழுமங்களுக்கு இடையில், இடைவிடாத பணிகளுக்கு இடையிலும் இடறாது பதிவுகள் இட்டு வரும் இளமைநீங்கா இணையக் குழுமம் எம் குழுமம். பொன்னியின் செல்வனைத் தாண்டியும், சோழர் மீதும், பண்டைத்தமிழர் வரலாறு மீதும் காதல் கொண்ட நெஞ்சங்கள் ஒன்று கூடி விவாதிக்கும் களம் அது. விவாதத்தின் அடுத்த கட்டமாக, எம் முன்னோர்கள் ஆண்டு வாழ்ந்த தலைநகரங்களையும், அவர் எடுப்பித்த கற்றளிகளையும் அவற்றின் கலை நுணுக்கங்களையும் கண்டு களிக்கும்(வியக்கும்) பொருட்டு, "சோழ தேச சுற்றுப் பயணம்" திட்டமிடப்பட்டது. கடந்த வருடம் முதல் முறையாக எம் குழும உறுப்பினர்கள் அப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர். பண்டைத் தமிழர்தம் செயற்கரிய கற்றளிகளையும், செவிக்கினிய வரலாற்றையும் ஒருமுறை கண்டும் கேட்டும் ரசித்தால் போதுமா என்ன!?? பருகப் பருக இனிமைதரும் அமுதமல்லவா அது!? அதனால் இவ்வருடமும் "சோழதேச சுற்றுப்பயணம்" திட்டமிடப் பட்டுள்ளது. சென்ற வருடம் பயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக நடத்தித் தந்த அதே குழு இவ்வருடமும் அப்பணியைத் திறம்பட மேற்கொள்ள சம்மதித்துள்ளது.(ஆர்குட் பக்கத்திற்கான சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன) ஒருங்கிணைப்பாளர் அன்புஇளவல்.ஜெயக்குமார்,மக்கள் தொடர்பாளர்,ஜோதிவேல் ஒலி-ஒளி ஓவியர் திருநாவுக்கரசு (ஆகா, என்ன ஒரு இனிமையான பெயர்)கணினியியல் கற்றிருந்தும் வரலாறு சொல்ல அதைப் பயன்படுத்துவது எப்படி என இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும் திருமதி.லக்ஷ்மி, மேலும் முக்கியமாக பயணத்திற்கென பிரத்தியேகமாக இயல் வட்ட மேலாடை (டி ஷர்ட்) வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கலை இயக்குனர் - புகைப்படவியலார் திரு சுப்பு அவர்கள் என அக்குழு திறம்பட தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த பயணத்திற்கான வெள்ளோட்டமாக, கடந்த இரு மாதங்களில், குழும மக்கள் தென்பாண்டி மண்டல, மற்றும் தொண்டை மண்டல சுற்றுப்பயணங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்துள்ளனர். எம்போன்ற கடைக்குடிமகனும் இந்த பயணத்திற்காக, மிகுந்த ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பயணம் குறித்த ஏற்பாடுகளின் தற்போதைய நிலைகுறித்த ஒரு சிறு பார்வை... இவ்வருடம் ஜூலை ஒன்பது, பத்து, பதினொன்றாம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த பயணம், தவிக்க முடியாத சில காரணங்களாலும், சென்ற கன்னிப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகச்சில குறைபாடுகளைத் தவிர்க்க எண்ணியும், ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது (பதினாறு, பதினேழு, பதினெட்டு). இன்னும் பதினெட்டு நாட்களே உள்ள நிலையில், நாம் பயணிக்கவிருக்கும் சீருந்து, தங்கவிருக்கும் விடுதி அறைகள் முதலியவை முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இயல்வட்ட மேலாடை வடிவமைப்பு இன்னும் ஒருவாரத்திற்குள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தில் பார்க்க வேண்டிய இடங்களாக திட்டமிடப்பட்டிருப்பவை, பின்வருமாறு - தஞ்சைப் பெரிய கோவில், பட்டீஸ்வரம், தாராசுரம், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை, கீழப்பழுவூர், மேலப்பழுவூர், நார்த்தாமலை, குமியன்மலை, கங்கைகொண்ட சோழபுரம், புள்ளமங்கை, திருவாரூர், வேப்பத்தூர், திருவாடுதுறை, சித்தன்னவாசல், பழையாறை, நிசும்பசூதனி திருக்கோவில்(தஞ்சை), காளி கோவில் (தஞ்சை) மற்றும் கொடும்பாளூர். பண்டை சோழர் வரலாற்றில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் கொண்டிருந்த பங்கு சொல்வதற்கரியது . ஒவ்வொரு இடம் குறித்தும் ஒரு தனிப்பதிவேஇட்டாலும் கொள்ளாத அளவிற்கு தகவல்கள் உள்ளன. நம்மால் முடிந்த வரை சேகரிக்கப்பட்ட தகவல்களும் நிழற்படங்களும் பயணத்திற்குப் பின்பு பதியப்படும்...
தொடர்ந்து பதிவோம்...இணைந்திருங்கள்...

Saturday, February 14, 2009

கல்வி, இலக்கியம்

சோழர் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.கோயில்கள், மடங்கள் தவிர பல்வேறு கல்விக்கூடங்களும் கல்வியைப் பரப்பி வந்தன. எண்ணாயிரம், திருமுக்கூடல், திருபுவனை ஆகிய இடங்களில் உள்ள சோழர்களின் கல்வெட்டுக்கள் அங்கு செயல்பட்டுவந்த கல்லூரிகள் பற்றிய விவரங்களை எடுத்துரைக்கின்றன. வேதங்கள், இதிகாசங்கள் தவிர, கணிதம், மருத்துவம் போன்றவையும் இந்த கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்டன. இந்த நிறுவனங்களை நடத்துவதற்கு ஏராளமான நிலக் கொடிகள் வழங்கப்பட்டிருந்தன.
தமிழ் இலக்கிய வளர்ச்சி சோழர் காலத்தில் அதன் உச்சத்திற்கே சென்றது எனலாம். திருத்தக்கதேவர் எழுதிய சீவகசிந்தாமணி மற்றும் குண்டலகேசி என்ற நூல்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவை.கம்பர் எழுதிய பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் சோழர் காலத்தில் படைக்கப்பட்ட சிறந்த நூலாகும்.முதலாம் குலோத்துங்கனின் கலிங்கப் படையெடுப்பை விவரிப்பது ஜெயங்கொண்டார் எழுதிய "கலிங்கத்துப்பரணி".ஒட்டக்கூத்தரின் "மூவர் உலா" மூன்று சொழமன்னர்களைப் பற்றியது.புகழேந்திப் புலவர் நளவெண்பாவைப்படைத்தார். தமிழ் இலக்கிய நூல்களான கல்லாடனாரின் கல்லாடம் என்ற நூலும், சமண முனிவரான அமிர்தசாகரர் படைத்த யாப்பெருங்கலமும், பவநந்தி முனிவரின் நன்னூலும், புத்தமித்திரர் படைத்த வீரசோழியம் என்ற நூலும் சோழர் காலத்தை சேர்ந்தவையே.

Tuesday, January 13, 2009

சோழ நாடு சோறுடைத்து


பொங்குக பொங்குக பைந்தமிழ் மொழிபோல்

பண்டைத் தமிழர் மனம்போல்

கரைபுரண் டோடும் காவிரி நதிபோல்

பொங்கும் மகிழ்ச்சி தமிழர் இல்லமெல்லாம் பரவ...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Monday, January 12, 2009

ராஜராஜேஸ்வரம்


தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள "ராஜராஜேஸ்வரம்" கோவில்களின் கோவில் என்று அழைக்கப்படுவதுண்டு. சோழர் ஆட்சியின் பொற்காலமாகிய கி.பி. 1000 இல் கட்டப்பெற்ற இக்கோவில், கலையின் உன்னதமான ஒரு பரிணாமம் எனலாம்.சோழர்களைப் பொறுத்த மட்டில் கோவில்கள் வெறும் கலைநயத்தை எடுத்துரைக்கும் ஒன்றாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, மக்களின் இயல்பு வாழ்க்கையே கோவிலைச் சுற்றி பின்னப்பட்டிருந்தது.விமானத்தின் பக்கச்சுவர்களில் உள்ள 107 பத்திகளைக் கொண்ட கல்வெட்டு தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தில் ராஜராஜசோழன் மற்றும் அவரது தமக்கை குந்தவி தேவியார் அவர்களின் பங்களிப்பைப் பற்றி கூறுகிறது. இக்கோவில் ஒரு கோட்டைக்குள் அமைந்துள்ளது. அதன் மதில்கள் கி.பி.16 ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பெற்றவயாக தெரிகின்றன. இக்கோவிலின் பிரதான விமானம் 200 அடி உயரம் கொண்டதாகவும், "தக்ஷின மேரு" எனும் சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகின்றது.*என்கொன சக்கரம் 81 கிலோ எடையுள்ள ஒரு பளிங்குக்கல்லின் மீது அமர்ந்துள்ளது. கோவில் உள்ள இடத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இக்கல் விசேஷமாக கொண்டுவரப்பட்டது என்று நம்பப்படுகின்றது. சக்கரத்தின் மூலைகளில் பிரம்மாண்டமான நந்திகளும், அதன் மேல் 3.8 மீட்டர் உயரமுள்ள கலசமும் அமைந்துள்ளன.நூற்றுக்கணக்கான சுவரோவியங்கள் விமானத்தை அலங்கரிக்கின்றன. (அவை பின்வந்த மராட்டியர்களால் சேர்க்கப்பட்டவை என்றொரு கூற்றும் உண்டு) மூலவராகிய பெருவுடையார் (ராஜராஜேஸ்வரமுடையார்) சிவலிங்கம் மிகப்பெரியதாய் இரண்டடுக்கு சுவர்களால் சூழப்பட்டதாய் உள்ளது. அச்சுவர்கைல் உள்ள கலைநயமிக்க சிற்பங்களும் சுவரோவியங்களும் காண்போரை வியக்கச்செஇபவையாய் உள்ளன.இக்கோவிலின் நீளமான பிரகாரமும் அதன் சுற்றுச்சுவர்களும் நம்மை ராஜராஜ சோழரின் காலத்திற்கே அழைத்துச்செல்கின்றன. பக்கச்சுவர்கள் முழுதும் பல்வேறு சிலைகளும் நந்திகளும் சிவலிங்கங்களும் நிறைந்த தூண்களோடு கூடிய விதானம் உள்ளது. கோவிலின் உள்ளேயே உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலும்,அருணகிரி நாதரால் பாடப்பெற்ற சுப்பிரமணியர் திருக்கோவிலும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையாகும்.கோவிலின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் முழுதும் நாயன்மார்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் மற்றும் 108 பரதநாட்டிய அபினயனங்களுடன் கூடிய சிவனின் (ஆடல்வல்லான், நடராஜர், திரிபுராந்தகர், தட்சிணாமூர்த்தி) உருவங்கள்ம் சோழர்களுக்கே உரிய விசேஷ முறையில் சுவரோவியங்களாக தீட்டப்பெற்றுள்ளன.கற்பக்கிரகம், அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம், இவை யாவும் தனித்தனியாக இருந்தாலும், காண்போரை வியக்க வைக்கும் வண்ணம் ஒரு ஒருங்கினைந்த அமைப்பைக் கொண்டு, ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே கட்டடக்கலையில் இப்படி ஒரு புரட்சியை செய்ய முடிந்தது எப்படி எனும் கேள்வியை எழுப்புகின்றது. மண்டப நுழைவாயில்களும் கோபுரங்களுடன் கூடிய பிரகார நுழைவாயில்களும் மிகப்பிரம்மாண்டமாய் அமைந்துள்ளன. பிரம்மாண்டமான கட்டமைப்புகளும், நுண்கலையுடன் கூடிய சிற்பங்களும் சோழர்களின் எண்ணிலடங்கா திறமைகளை எடுத்துக்கூற வல்லவையாக உள்ளன.இக்கோவிலில் பள்ளிகொண்டுள்ள சிவனாரின் பெயர் "தக்ஷின மேரு விடங்கர்" எனவும், "ஆடவல்லான்" எனவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட நந்தியும் கோவிலின் பிரம்மாண்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் 25 டன் எடையுடன், 12 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

இடைக்காலச் சோழர்களின் வரலாற்றுச் சுருக்கம்


கி.பி.10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர்கள் தமிழகத்தின் சக்தி வாய்ந்த பேரரசாக உருவெடுத்தனர். முதலில் தஞ்சையையும் பின்னர் கங்கைகொண்ட சோழபுரத்தையும் தலைநகராகக் கொண்ட அவர்கள் இந்திய தீபகற்பத்தின் பறந்து விரிந்த நிலப்பரப்பையும் தாண்டி, கி.பி.1025 வாக்கில் இந்தியாவின் தெற்கு, மேற்கு பகுதிகளில் இருந்த தீவுகளையும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் தம் ஆட்சிப் பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர்."... கி.பி.9 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சோழப்பேரரசு தென்னிந்தியாவின் தன்னிகரில்லா சக்தியாகத் திகழ்ந்தது. அதன் தனிப்பெரும் சக்தியான மாபெரும் கடற்படையைக் கொண்டு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளை தனக்குள் அடக்கியது. குப்தர்கள் காலத்திலிருந்தே சோழ வம்சம் ஒரு தனிப்பெரும் சக்தியாக விளங்கி வந்தது. போர்க்கலையையும் தவிர்த்து சோழர்கள் கடல் வாணிபத்தில் தலை சிறந்து விளங்கி வந்தனர்" என்று இந்தியாவின் முதல் பிரதமர் மறைதிரு. ஜவகர்லால் நேரு அவர்கள் தனது " உலக வரலாற்றின் மின்னல்கள்" (Glimpses of World History) எனும் நூலில் தெளிவாக இடைக்காலச் சோழர்களின் சிறப்பை விளக்கியுள்ளார்.எ.ல். பாஷம் எனும் வட இந்திய வரலாற்று ஆசிரியர் தனது "வாண்டர் தட் வாஸ் இந்தியா" எனும் புத்தகத்தில், வரலாற்றின் இடைக்காலத்தில் சோழர்களின் தவிர்க்க முடியா முக்கியத்துவத்தை பின்வருமாறு விளக்குகிறார்..." இடைக்காலத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வலிமை வாய்ந்த பேரரசாக சோழப் பேரரசு திகழ்ந்து வந்தது. நவீன காலத்திற்கு முன்பாகவே இந்தியப் பெருங்கடலின் அநேக பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த வலிமைமிகு கடல் சக்தியாக சோழர்கள் விளங்கி வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்பான காலத்தை எடுத்து கொண்டால், சோழர்கள் மட்டுமே தெற்காசியாவின் கடல் ராஜ்யத்தை ஆண்டு வந்தனர்"சோழர்களின் பல்துறை வளர்ச்சியைக் கண்டு, ஒரு தமிழகத்தை சாராத வரலாற்றாசிரியரே தனது "Currents of South-East Asian History" மற்றும் "Kings of World Stature" புத்தகங்களில் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் சிறப்பை வியந்து போற்றியுள்ளார்.

இடைக்காலச் சோழர்கள் (கி.பி.848 - கி.பி.1029)

1. விஜயாலய சோழன் : கி.பி.848-881 : பெற்றோர் பெயர் அறியப்படவில்லை
தலைநகரம்: பழையாறை, பிநாளில் தஞ்சை

2.ஆதித்த சோழன் :848-881 கி.பி. : (1) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை

3.பராந்தக சோழன் - 1: 848-881 கி.பி. : (2) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

4.கண்டராதித்த சோழன் : 950-957 கி.பி. : (3) இன் இரண்டாம் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்

5.அரிஞ்சய சோழன் : 956-957 கி.பி. :(3) இன் மூன்றாம் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்

6.பராந்தக சோழன்-2 : (சுந்தர சோழன்) 957-970 கி.பி. (5) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

(7) உத்தம சோழன் : கி.பி. 970-985 - (4) இன் மகன்
தலைநகரம் - தஞ்சாவூர்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

(8) ராஜராஜ சோழன் - 1 : கி.பி. 985-1014 - (6) இன் மகன்
தலைநகரம் - தஞ்சாவூர்
துறைமுகம் - நாகப்பட்டினம்
வட இந்தியாவின் கலிங்கத்தை வெற்றி கொண்டவர்
கடல் கடந்து இலங்கையையும் மாலத்தீவுகளையும் வென்றவர்
சீன நாட்டுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தவர்

(9) ராஜேந்திர சோழன் - 1: கி.பி.1012-1044 - (8) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
வட இந்தியாவின் கங்கை முதல் வங்கதேசம் வரையிலான பகுதிகளை வென்றவர்
கடல் கடந்து இலங்கை, லக்ஷ தீவுகள், மாலத்தீவுகள், அந்தமான் நிக்கோபார், கீழ் பர்மா, கீழ் தாய்லாந்து, மலேசியாவின் பல பகுதிகள், இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் லாவோ தீவுகளையும் (கம்போடியா மன்னரின் நட்பு பொருட்டு) வென்றவர்.
கம்போடியா மற்றும் சீனாவுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தார்.

(10) ராஜாதிராஜ சோழன் - 1: கி.பி.1018-1054 - (9) இன் மூத்த மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்

(11) ராஜேந்திர சோழன் - 2 : கி.பி. 1051-1063 - (9) இன் இரண்டாம் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்

(12) வீரராஜேந்திரசோழன் : கி.பி.1063-1070 - (9) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

கடல் கடந்து இலங்கை, கீழ் பர்மா, மலேசியாவின் கேதா, இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா வின் சில பகுதிகள், மற்றும் காண்டோனுக்கு அருகிலுள்ள தாவொயிஸ்த் சீனா பகுதிகளை தனது மருமகன் முதலாம் குலோத்துங்க சோழனை - (14) கொண்டு வென்றார்.

(13) அதிராஜேந்திர சோழன் : கி.பி. 1067-1070 - (12) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(14) குலோத்துங்கசோழன் - 1 : கி.பி.1070-1120 - (10), (11), & (12) இன் தமக்கை மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்.

(15) விக்கரமசோழன்: கி.பி. 1118-1135 - (14) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(16) குலோத்துங்க சோழன் - 2 : கி.பி. 1133-1150 - (15) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(17) ராஜராஜசோழன்- 2 : கி.பி.1146-1163 - (16) இன் மகன்
தலைநகரம்: கங்கைகொண்டசோழபுரம், பிற்காலத்தில் ராஜராஜபுரம்(பழையாறை)
துறைமுகம் - நாகப்பட்டினம்

(18) ராஜாதிராஜசோழன் - 2 : கி.பி.1163-1178 - (15) இன் பேரன் & (17) இன் ஒன்று விட்ட சகோதரர்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்.

(19) குலோத்துங்கசோழன்- 3 : கி.பி.218 - (17) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(20) ராஜராஜசோழன்- 3 : கி.பி. 256 - (19) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(21) ராஜேந்திரசோழன்- 3 : கி.பி.1246-1279 - (20) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

சோழ வள நாடு

சோழ க்கள் வாழ்க்கைமுறையைப்பற்றி இத்தளத்தில் பதிய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்த எழுத்துக்களே பின்வருபவை. வரலாற்றுக் கதையுலகின் முடிசூடா மன்னர்களுள் ஒருவரான "சாண்டில்யன்" அவர்களின் "கன்னி மாடம்" புதினத்தின் 43 ஆம் அத்தியாயத்தின் துவக்கத்தில் மிகத்தெளிவாக சோழர்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி விளக்கியுள்ளார் (தலைநகர மக்கள்).இந்நாவலில் குறிப்பிடப் பட்டுள்ள அரசன்: இரண்டாம் ராஜாதிராஜன்

ஆட்சிக் காலம் : கி.பி.1163-1178

கங்கையினும் புனிதமான காவிரியின் பாய்ச்சலால் பயிரும் மன்னுயிரும் செழித்துச் சிறந்து ஓங்கிய சோழ மண்டலத்தின் தலைநகரன்களுள் ஒன்றான கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரம்மாண்டமான கட்டடங்களின் கிரீடங்கள், சற்று தூரத்தே தெரிந்த சோழமங்கலம் என்ற ஏரியின் பெரிய நீர்ப்பரப்பில் பிரதிபளித்துக்கொண்டிருந்தன. வடநாடு வென்று வாகைசூடிய ராஜேந்திரன் வல்லமைக்கும் தமிழ்ச் சிற்பிகளின் கைத்திறனுக்கும் அடையாளமாக விளங்கிய அந்த நகரத்தின் கோட்டைச் சுவர்களை திடீரென்று அணுக பயந்த காலைச் சூரியன் எதிரேயிருந்த சொலைமரங்களின் இடுக்குகள் வழியாக தன் கிரகானங்களைச் செலுத்தி பார்க்கத் தொடங்கினான். நகரத்துக்கு நாயகமாக விளங்கிய சோழன் கேரளன் என்ற பிரசித்தி பெற்ற மன்னர்பிரான் அரண்மனையில் இன்னிசைக் கருவிகளின் உதயநாதம் எழும்பி, அரண்மனைச்சுவர்களில் தாக்கி அரண்மனையையே நாதமயமாக அடித்துக் கொண்டிருந்தது.அரண்மனையை அடுத்தாற்போல் எவலாலருக்காக நிர்மானிக்கப்பட்டிருந்த "திருமஞ்சனத்தார் வேள" த்தில் விடியுமுன்பே ஏற்பட்ட வேலைப்பரபரப்பு, கதிரவன் தலைகாட்டியதும் அதிகமாகி ஏவலாளர் அங்குமிங்கும் அதிவேகமாக நடமாடிக்கொண்டிருந்தாலும், மன்னன் தியிலேழாத காரணத்தால் சப்தம் சிறிதும் தெரியாமல் அடி மேல் அடி வைத்து நடந்துகொண்டிருந்தனர். ஆனால் மன்னற்கு மன்னனாய், உயிருக்கெல்லாம் பேருயிறாய் விளங்கி வந்தவனும், ஒன்பதாம் திருமறையில் சேர்க்கப்பட்டுள்ள கருவூர்த்தேவரின் பதிகமொன்றில் சிறப்பிக்கப்பட்டவனுமான சிவபெருமான் உறையும் கங்கைகொண்ட சோழேசுரத்தின் சங்கங்கள் பூம்பூம் என்று சப்தித்துக் கொண்டிருந்ததன்றி மேளவாத்தியங்களும் பலமாக முழங்கிக்கொண்டிருந்தன. நூறடிச் சதுரமாக அமைந்துள்ள அந்த நூற்றெழுபதடி உயரமுள்ள ஒன்பது அடுக்குச் சொழேச்சரக் கோபுரமும் ராஜராஜன் சிருஷ்டித்த தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தன் நிழழை எந்த இடத்திலும் பாய்ச்சாது கர்வத்துடன் ஆகாயத்தில் தலைநிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது. அந்த கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும் ஒற்றைச் சிவலிங்கமும் சிங்கத்தின் வயிற்றில் சிங்கமே பிறக்கும் என்பதைப் போல் இராஜராஜன் வயிற்றில் பிறந்த இராஜேந்திர சோழன் கலை உணர்ச்சியில் தந்தைக்குச் சிறிதும் சளைத்தவனல்ல என்பதற்கு சான்றுகளாக விளங்கின. இத்தனை அழகான நகருக்கு மெருகு கொடுக்காதிருப்பது தவறு என்ற எண்ணத்தால் மெள்ள மெள்ள நகரத்தின் மதில்களையும் சொழேச்சரத்தின் தங்கக் கவசங்களையும் அரண்மனையின் கிரீடங்களையும் தழுவத் தொடங்கிய சூரிய கிரகணங்கள் சோழ சங்கத்தின் நீர்ப்பரப்பிலும் பாய்ந்து வெள்ளி அலைகளைத் தரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தன. சூர்யோதத்தை உணர்ந்துவிட்ட அரண்மனைக் கோட்டத்திலிருந்த போர் யானைகள் அசைந்தாடி எழுந்திருந்து திரும்பித் திரும்பி உடலை முறித்துத் துதிக்கைகளை உயர்த்தி பிளிறியதால் ஏற்பட்ட சத்தம் நகரத்துக்குப் புறம்பே கிடந்த சோலைகளை ஊடுருவிச் சென்றது மட்டுமன்றி, கட்டட மதில் சுவர்களையும் தாக்கிப் பயங்கரமாக எதிரொலி செய்தது. விடியற்காலையிலேயே திருமஞ்சன நீரைக் கொண்டுவரச் சொழகங்கத்துக்கு ஒட்டி செல்லப்பட்ட கோவில் யானைகள் நீரில் விழுந்து பெரிய அலைகளைத் தரையில் மோதவிட்டும் துதிக்கையால் நீரை உறிஞ்சி ஆகாயத்தில் வானம் போல விட்டும் விளையாடிக்கொண்டிருந்தன. இரவுக்காவலருக்கு ஓய்வளிக்கக் காவல் மற்ற வேண்டிய வீரர்கள் பலர் புரவிகளில் ஏறி கனவேகமாகச் சென்று கொண்டிருந்ததால் ராஜவீதிகளில் ஏற்பட்ட குதிரைக் காலடிகள் நகரமெங்கும் பலமாக சப்தித்துக் கொண்டிருந்தன. கடைவீதிகள் திறக்கத் தொடங்கியதால் பாத்திரங்களின் சப்தமும், உருண்டோடிய கட்டைவண்டிகளின் அரவமும், ஒரு பக்கத்திலிருந்து வீசிக் கொண்டிருந்த பூக்களின் வாசனையும் கங்கைகொண்டசொழபுரத்தின் பகற்கால நடவடிக்கைகள் துவங்கிவிட்டதை உணர்த்தின. பகல் வேலையில் முதல் ஜாமத்தில் சப்திக்க வேண்டிய உதயகாலத் தாரைகள் கோட்டை வாசலில் திரும்பாத் திரும்ப முழங்கத் துவங்கின. ஏரியில் ஸ்நானம் செய்வதற்காகத் தோளில் பட்டாடைகளையும் செவ்விடைகளில் குடங்களையும் தாங்கி நடந்த அந்த சோழபுர மங்கையரின் செங்கை வளையல்கள் குலுங்கியதாலும் கால்கொலுசுகள் முரன்று பாடியதாலும் ஏற்பட்ட இன்பகீதத்தை மாற்ற நீடுகளுக்குக் காட்டுவதற்காகக் காற்றுக் கடவுள் தன்னுடைய தென்றல் தூளியில் தூக்கி எடுத்துக்கொண்டு துரிதமாக வடக்கு நோக்கி செல்லலானான்.சூர்யோதத்தால் தட்டி எழுப்பப்பட்ட கறவைகளும் கன்றுகளும் காளைகளும் ஆயர்களால் ஓட்டிச் செல்லப்பட்டு மந்தைமந்தையாய் நகரத்துக்கு வெளியே தொலைதூரத்தில் கிடந்த மேய்ச்சல் வெளிகளுக்காகச் சென்றுகொண்டிருந்தன. ஆயர்கள் நான்குபுறத்திலும் ஓடி மந்தையிலிருந்து பிரிந்த கன்றுகளை விரட்டி அடக்கியும், மந்தையில் புகுந்து முட்டிய மாடுகளை கழியால் புடைத்து அடக்கியும், இடையில் கிடைத்த சிலவினாடிகளில் உல்லாசமாகப் பாடிக்கொண்டும் போய்க்கொண்டிருந்தனர். சோழகங்கத்தின் நீர்ப்பரப்பாலும் காவிரித்தாயின் வாய்க்கல்களாலும் வருடம் பூராவும் பாசனம் கிடைத்துக்கொண்டிருந்ததால் சதாசர்வகாலமும் பயிர்த்தொழில் நடந்து, "சோழவள நாடு சோறுடைத்து" எனும் பெருமையை உலகத்துக்கு அறிவித்துக்கொண்டிருந்த சோழ மண்டலத்தின் அந்த கோ நகரத்தின் கழநிவெளிகள் பச்சைப் பசேலென்று பெரிய பெரிய பயிர்ப்பாளங்களை நகரத்தைச் சுற்றி விரித்திருந்தன.

"ஓங்கு பெருந்செந்நெலூடு கயலுகள், பூங்குவளைப் போதிற் பொறிவண்டு கண்படுப்ப" என்று ஆண்டாள் கண்ட கனவைப் பதினொன்று பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் நனவாக்கித் தந்தது சோழர் அரசகுலம்.